சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் காதல், கல்யாணம், பிரிவு என பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. சில ஆண்டுகள் காதல், நான்கு வருட திருமண வாழ்க்கை என இருந்தவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர். அதன்பின் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.
திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக பிஸியாக இருந்த சமந்தா, தற்போது பாலிவுட் வரை செல்லும் ஆவலில் இருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால், அவருக்கு சமந்தா வாழ்த்து சொல்லவில்லை என சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
சமந்தா தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். கணவரைப் பிரிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என பதிலுக்கு கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.