ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் காதல், கல்யாணம், பிரிவு என பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. சில ஆண்டுகள் காதல், நான்கு வருட திருமண வாழ்க்கை என இருந்தவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர். அதன்பின் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.
திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக பிஸியாக இருந்த சமந்தா, தற்போது பாலிவுட் வரை செல்லும் ஆவலில் இருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால், அவருக்கு சமந்தா வாழ்த்து சொல்லவில்லை என சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
சமந்தா தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். கணவரைப் பிரிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என பதிலுக்கு கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.