ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கடந்த 2002-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் தான் தெலுங்கு நடிகர் கோபிசந்த். பின்னாளில் ஹீரோவாக புரமோஷன் பெற்ற இவர், அதன்பிறகு வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே இல்லை. தற்போது தமன்னாவுடன் இணைந்து சீட்டிமார் என்கிற படத்தில் நடித்துள்ள .கோபிசந்த்திடம், அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபிசந்த், “தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க போகிறேன். வில்லனாக நடிக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அப்படி நடித்து ஹீரோ இமேஜை நானே கெடுத்துக்கொள்ள மாட்டேன். முன்பு வில்லனாக நடித்தது கூட, என்னிடம் இருக்கும் நடிப்புத்திறமையை வெளியே காட்டுவதற்குத்தான்.. ஆனால் என்னுடைய நோக்கம் எப்போதுமே ஹீரோ ஆவதிலேயே இருந்தது” என கூறியுள்ளார்.