ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

கடந்த 2002-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் தான் தெலுங்கு நடிகர் கோபிசந்த். பின்னாளில் ஹீரோவாக புரமோஷன் பெற்ற இவர், அதன்பிறகு வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே இல்லை. தற்போது தமன்னாவுடன் இணைந்து சீட்டிமார் என்கிற படத்தில் நடித்துள்ள .கோபிசந்த்திடம், அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபிசந்த், “தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க போகிறேன். வில்லனாக நடிக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அப்படி நடித்து ஹீரோ இமேஜை நானே கெடுத்துக்கொள்ள மாட்டேன். முன்பு வில்லனாக நடித்தது கூட, என்னிடம் இருக்கும் நடிப்புத்திறமையை வெளியே காட்டுவதற்குத்தான்.. ஆனால் என்னுடைய நோக்கம் எப்போதுமே ஹீரோ ஆவதிலேயே இருந்தது” என கூறியுள்ளார்.