மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது கோபிசந்த் தனது 31வது படமான 'பீமா' என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னட இயக்குனர் ஷர்சா இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படத்தில் கோபிசந்துக்கு ஜோடியாக நடிகைகள் மாளவிகா சர்மா மற்றும் பிரியா பவானி சங்கர் என இருவரும் நடிக்கின்றனர். பிரியா பவானி சங்கர் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் இதுவாகும்.




