மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கு நடிகர் கோபிசந்த் தொடர்ந்து அதிரடியான குடும்ப படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடைசியாக ராமபாணம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கோபிசந்த் தனது 31வது படம் குறித்து அறிவித்துள்ளார். பிரபல கன்னட இயக்குனர் ஷர்சா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பீமா என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். இதுவும் கோபிசந்த்தின் வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிறது. போலீஸ் வேடத்தில் அவர் நடிக்கிறார்.




