நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தெலுங்கு நடிகர் கோபிசந்த் தொடர்ந்து அதிரடியான குடும்ப படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடைசியாக ராமபாணம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கோபிசந்த் தனது 31வது படம் குறித்து அறிவித்துள்ளார். பிரபல கன்னட இயக்குனர் ஷர்சா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பீமா என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். இதுவும் கோபிசந்த்தின் வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிறது. போலீஸ் வேடத்தில் அவர் நடிக்கிறார்.