விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷ்ணுமஞ்சு, நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர். இதையடுத்து பல அதிரடி நலத்திட்ட அறிவிப்புகளையும் அவர்கள் போட்டி போட்டு அறிவித்து வந்தனர்.
அதையடுத்து, விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் பிரகாஷ்ராஜை கன்னடர் என்று கொடி பிடித்தார்கள். ஆனபோதும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பிரகாஷ்ராஜ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் அவரது அணி பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது. அதன்காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜ்க்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடியாக நடக்கப்போகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது குழுவை தற்போது அறிவித்துள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத்தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத்தலைவர்களாகவும், ஜீவிதா ராஜசேகர் பொதுச்செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.