என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷ்ணுமஞ்சு, நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர். இதையடுத்து பல அதிரடி நலத்திட்ட அறிவிப்புகளையும் அவர்கள் போட்டி போட்டு அறிவித்து வந்தனர்.
அதையடுத்து, விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் பிரகாஷ்ராஜை கன்னடர் என்று கொடி பிடித்தார்கள். ஆனபோதும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பிரகாஷ்ராஜ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஜீவிதா, ஹேமா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். இதனால் அவரது அணி பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது. அதன்காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் பிரகாஷ்ராஜ்க்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடியாக நடக்கப்போகிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது குழுவை தற்போது அறிவித்துள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத்தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத்தலைவர்களாகவும், ஜீவிதா ராஜசேகர் பொதுச்செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            