பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் அஜித்துக்கு முதுகு தண்டுவடம், கால், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பைக் விபத்தின் போதும், சண்டை காட்சியில் நடித்தபோதும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது முதுகு தண்டில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு விட்டது என்று சமீபத்தில் சண்டை இயக்குனர் கனல் கண்ணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அஜித் அவ்வப்போது சிறிய ஆபரேஷன்கள் செய்து கொண்டு சமாளித்து வருகிறார்.
இதேபோன்று கடந்த 21 ஆண்டுகளாக தசை நார் கிழிசலுக்கு ஆபரேஷன் செய்யாமல் வலியுடன் வாழ்ந்து வருகிறார் மம்முட்டி. கோழிகோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்த அவர் இதுகுறித்து அங்கு பேசியதாவது:
என் இடது காலில் இருக்கும் தசைநார் கிழிந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் காலின் நீளம் குறைந்துவிடும் என்று டாக்டர்கள் கூறினார்கள். என் ஒரு காலின் நீளம் மட்டும் குறைந்தால் அது கேலி கிண்டலுக்கு ஆளாகும். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அவ்வப்போது வலி பிரச்சினை வரும். என்றாலும் அதை சமாளித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்றார்.
இந்த நிகழ்ச்சி கொரோனா விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாக விழா நடத்தியவர்கள் மீதும், கலந்து கொண்ட மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் மீதும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.