வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் கூட்டமாக பல நடிகர்கள் நடித்திருந்தாலும் குணா குகைக்குள் தவறி விழும் நடிகராக நடித்திருந்த ஸ்ரீநாத் பாஷியும் தன் உயிரை பணயம் வைத்து அந்த குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றுபவராக நடித்த சவ்பின் சாஹிரும் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்கள். அந்த வகையில் சவ்பின் சாஹிர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். ஸ்ரீநாத் பாஷிக்கும் பல படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.
அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பொங்கலா'. இந்த படத்தை ஏபி பினில் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முக்கியமான சில காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சி அளித்தது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் இப்படி பட காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் இயக்குனர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பைசல் ஷா என்பவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர்தான் படப்பிடிப்பு சமயத்தில் தனது மொபைல் போனில் சில காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.




