காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

தற்போது ஆச்சார்யா படத்தை முடித்துவிட்ட சிரஞ்சீவி அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இந்தக்கதைக்கு பொருத்தமான டைட்டிலை ஆலோசித்தபோது இயக்குனரும் சிரஞ்சீவியும் உட்பட அனைவருமே 'காட்பாதர்' என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தனர்.
ஆனால் அந்த டைட்டிலை ஏற்கனவே பிரபல தெலுங்கு இயக்குனர் சம்பத் நந்தி என்பவர் தனது கதைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் தனது படத்திற்கு அந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கிறது என சிரஞ்சீவியே சம்பத் நந்தியை போனில் அழைத்து பேசியுள்ளார். சிரஞ்சீவியே கேட்கும்போது அதைவிட வேறு என்ன சந்தோசம் என காட்பாதர் டைட்டிலை தருவதற்கு சம்மதித்து விட்டாராம் சம்பத் நந்தி. ஒருவழியாக டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு எளிதாக கிடைத்துவிட்டது.




