பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமாவில் நுழைந்த இத்தனை வருடங்களில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது தான் முதன் முறையாக 'சல்யூட் என்கிற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. ஆனால் கேரளாவில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படாததால், மீதி காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் முதன்முதலாக இயக்கிய, மோகன்லால் நடித்த உதயநாணுதாரம் படத்தின் படப்பிடிப்பை இங்கேதான் நடத்தினாராம். அதன்பிறகு 17 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தான் மீண்டும் இங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்துள்ளாராம். இதனால் ஆர்வத்துடன் ராமோஜிராவ் பிலிம்சிட்டி முன்பாக நின்று புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.