'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தற்போது தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அவருடன் ராம்சரண், காஜல்அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.
அதனால் ஆகஸ்டு மாதத்தில் இருந்து மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போகிறார் சிரஞ்சீவி. இந்தநிலையில், நேற்று முதல் ஐதராபாத்தில் அப்படத்திற்கு பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. அதற்கான பூஜை விழா நேற்று நடைபெற்றுள்ளது. பிரபல தெலுங்கு ஆர்ட் டைரக்டர் சுரேஷ்செல்வராஜன் இப்படத்திற்காக பிரமாண்டமான கோயில் நகரத்தை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.




