ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

தற்போது தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அவருடன் ராம்சரண், காஜல்அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.
அதனால் ஆகஸ்டு மாதத்தில் இருந்து மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போகிறார் சிரஞ்சீவி. இந்தநிலையில், நேற்று முதல் ஐதராபாத்தில் அப்படத்திற்கு பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. அதற்கான பூஜை விழா நேற்று நடைபெற்றுள்ளது. பிரபல தெலுங்கு ஆர்ட் டைரக்டர் சுரேஷ்செல்வராஜன் இப்படத்திற்காக பிரமாண்டமான கோயில் நகரத்தை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.