நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

தற்போது தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அவருடன் ராம்சரண், காஜல்அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.
அதனால் ஆகஸ்டு மாதத்தில் இருந்து மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போகிறார் சிரஞ்சீவி. இந்தநிலையில், நேற்று முதல் ஐதராபாத்தில் அப்படத்திற்கு பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. அதற்கான பூஜை விழா நேற்று நடைபெற்றுள்ளது. பிரபல தெலுங்கு ஆர்ட் டைரக்டர் சுரேஷ்செல்வராஜன் இப்படத்திற்காக பிரமாண்டமான கோயில் நகரத்தை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.




