நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் தற்போது பாட்டு படத்தை அல்போன்ஸ் புத்ரன் தள்ளிவைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் தற்போது பஹத் பாசில் தெலுங்கு மொழியிலும் நடிக்க துவங்கி பிஸியாகி விட்டதால், பாட்டு படத்தை துவங்க இன்னும் பல மாதங்கள் ஆகுமாம். அதேசமயம் பிரித்விராஜூக்காக இவர் தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்ல, பிரித்விராஜும் அந்த கதையை ஒகே பண்ணி விட்டாராம். அதனால் பிரித்விராஜ் படத்தை முதலில் ஆரம்பிக்கும் பணியில் இறங்கி இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்ரன்.