புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் தற்போது பாட்டு படத்தை அல்போன்ஸ் புத்ரன் தள்ளிவைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் தற்போது பஹத் பாசில் தெலுங்கு மொழியிலும் நடிக்க துவங்கி பிஸியாகி விட்டதால், பாட்டு படத்தை துவங்க இன்னும் பல மாதங்கள் ஆகுமாம். அதேசமயம் பிரித்விராஜூக்காக இவர் தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்ல, பிரித்விராஜும் அந்த கதையை ஒகே பண்ணி விட்டாராம். அதனால் பிரித்விராஜ் படத்தை முதலில் ஆரம்பிக்கும் பணியில் இறங்கி இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்ரன்.