நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, தனது தந்தையின் பிறந்தாநாளான மே-31 அன்று வழக்கமாக தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை, போஸ்டர், டீசர் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் அப்படி எந்த தகவலும் அவர் படம் குறித்து வெளியாகவில்லை. அதேசமயம் அவரது தந்தை கிருஷ்ணா, ஒரு பேட்டியில் மகேஷ்பாபு தனது கோரிக்கை ஒன்றை நிராகரித்தது குறித்து பகிர்ந்துகொண்ட புதிய தகவல் வெளியானது.
அதாவது கடந்த 70 வருடங்களுக்கு முன் என்.டி.ராமாராவ் மற்றும் ரங்காராவ் இருவரும் இணைந்து நடித்த பாதாள பைரவி என்கிற மாயாஜால படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இந்தியில் ரீமேக் செய்து அதில் மகேஷ்பாபு நடிக்க வேண்டும் என அவரிடம் கூறினாராம் தந்தை கிருஷ்ணா.
ஆனால் மகேஷ்பாபுவோ தந்தையின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டாராம். ரொம்ப பழைய படம், இந்த காலத்தில் ரீமேக் செய்யும்போது, அதுவும் தனக்கு செட்டாகுமா என்கிற காரணத்தினால் அவர் மறுக்கவில்லை.. பொதுவாகவே ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நடிப்பதில்லை என்பதையும் மகேஷ்பாபு கொள்கையாவே வைத்திருப்பதுதான், தனது தந்தையின் கோரிக்கையை நிராகரிக்க காரணமாம்.