சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்திற்கு இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். நான்கு பாகங்களுக்குமே கதாசிரியர் எஸ்.என்.சுவாமி கதை எழுத, இயக்குனர் கே.மது இந்த படங்களை இயக்கியிருந்தார். இந்தநிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் ஐந்தாம் பாகம் துவங்குவதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜேக்ஸ் பிஜாய், “மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த சிபிஐ படத்தின் 5ஆம் பாகத்திற்கு இசையமைப்பதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறன்” என கூறியுள்ளார்..
தமிழில் துருவங்கள் பதினாறு, மாபியா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற 'களக்காத்தா சந்தனமேரா' என்கிற பாடல் ரசிகர்களிடையே வெகு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.