ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்திற்கு இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். நான்கு பாகங்களுக்குமே கதாசிரியர் எஸ்.என்.சுவாமி கதை எழுத, இயக்குனர் கே.மது இந்த படங்களை இயக்கியிருந்தார். இந்தநிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் ஐந்தாம் பாகம் துவங்குவதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜேக்ஸ் பிஜாய், “மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த சிபிஐ படத்தின் 5ஆம் பாகத்திற்கு இசையமைப்பதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறன்” என கூறியுள்ளார்..
தமிழில் துருவங்கள் பதினாறு, மாபியா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற 'களக்காத்தா சந்தனமேரா' என்கிற பாடல் ரசிகர்களிடையே வெகு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.