‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தற்போது சிரஞ்சீவியை வைத்து ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கொரட்டால சிவா. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது.
ஆனால் இந்த தகவல் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. காரணம் பிரபாஸுடன் சாஹோ படத்தில் இணைந்து நடித்த ஷரத்தா கபூர் பற்றி அப்போது பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது.. ஆனால் படமும் சரியாக போகவில்லை. ஷ்ரத்தா கபூரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தோல்வி சென்டிமென்ட் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தையும் பாதித்துவிட கூட என்கிற விதமாக சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்.