‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் இயற்கையாகவோ அல்லது கொரோனாவுக்கோ மரணத்தை தழுவி வருகின்றனர். குறிப்பாக மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல கதாசிரியரும் இயக்குனருமான டென்னிஸ் ஜோசப் என்பவர் நேற்று காலமானார். இந்த அதிர்ச்சி விலகும் முன்பே தேசிய விருதுபெற்ற இன்னொரு மலையாள கதாசிரியரும், நடிகருமான மாடம்பு குஞ்சுக்குட்டன் என்பவரும் இன்று மரணத்தை தழுவியுள்ளார்.
எண்பது வயதான மாடம்பு குஞ்சுக்குட்டன் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(மே 11) காலை மரணம் அடைந்தார். இவருடன் பணியாற்றிய பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் கதாசிரியராகவும், நடிகராகவும் வலம் வந்த இவர் 2000த்தில் வெளியான கருணம் என்கிற படத்தின் சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றவர்.. மேலும் கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, 2001ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொடுங்கோல்லூர் தொகுதியில் பிஜேபி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.