Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கணவர் மரண செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டில் கதறிய நடிகை

25 மார், 2021 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Biggboss-contestant-Bhagyalakshmi-husband-dead

மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பிரபல மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவருமான பாக்யலட்சுமியும் கலந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் பாக்யலட்சுமியின் முன்னாள் கணவர் ரமேஷ்குமார் காலமானார். இந்த தகவல் பிக்பாஸ் வீட்டிலிருந்த பாக்யலட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது.

கன்பெஷன் அறைக்கு வரவழைக்கப்பட்ட பாக்யலட்சுமி இந்த செய்தியை கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவர், கொஞ்ச நேரத்தில் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தார். தனது கணவருடனான சில நினைவுகளை பிக்பாஸிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதாக செல்ல விரும்புகிறீர்களா என அவரிடம் பிக்பாஸ் கேட்டார். அதற்கு, கணவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து வந்துவிட்டதால், தற்போது அங்கே சென்றால் என்னவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டுமோ தெரியவில்லை.. ஆனால் எனது மகன்கள் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்களிடம் போனில் பேச ஏற்பாடு செய்து கொடுங்கள்” என கேட்டுக் கொண்டார்.

கன்பெஷன் அறையை விட்டு அழுதுகொண்டே வந்த பாக்யலட்சுமியை பார்த்து, சக போட்டியாளர்கள் அதிர்ந்து போனார்கள். விஷயம் அறிந்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அன்றிரவு வெளியே அமர்ந்தபடி சக போட்டியாளர்கள் இருவரிடம் பேசிய பாக்யலட்சுமி, தனது கணவருக்கு சிறுநீரக கோளாறு என்றும், தான் மாற்று சிறுநீரகம் தருவதாக கூறியும் ஈகோ காரணமாக மறுத்துவிட்டார் என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, அவரை பார்த்துவிட்டுத்தான் வந்ததாகவும், தனது மகன்களிடம் அவரை கவனித்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு வந்ததாகவும் கூறினார் பாக்யலட்சுமி.

இப்படிபட்ட சூழலில் இறுதிச்சடங்கிற்கு சென்றாலும் சங்கடம், போகாவிட்டாலும் தனது உறவினர் மற்றும் சோஷியல் மீடியாவிலும் தனை அவதூறாக பேசுவார்கள், ஆனால் போகத்தான் வேண்டும் என தனது மனக்குமுறலையும் வெளியிட்டார். அதற்கு சக போட்டியாளர்கள், நீங்கள் அங்கே போக தேவையில்லை என அவரை சமாதானப்படுத்தினார்கள்.. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலும், சென்னையில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் இயக்கும் 'பாரோஸ்'  பூஜையுடன் துவங்கியதுமோகன்லால் இயக்கும் 'பாரோஸ்' ... சாய்பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன் சாய்பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

unmaitamil - seoul,தென் கொரியா
27 மார், 2021 - 00:34 Report Abuse
unmaitamil இந்த பெண் ஒரு டுபாகூர் பார்ட்டி. நல்ல குடும்பத்தில் பிறந்த, இப்போது இறந்த, ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டே, வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார். இதை கண்டித்த கணவரிடம் சண்டை இட்டு, இரண்டு நாளில் வருவதாக கூறி வீட்டைவிட்டு சென்றவர், திரும்பி வரவே இல்லை. விவாக ரத்து நோடிஸ்த்தான் வந்தது. அந்த மனிதர் விவாக ரத்தும் கொடுத்து, தன் சொத்தின் பாதியையும் கொடுத்தார். இதை, இப்போது இறந்துபோன இவரது முதல் கணவரே ஒரு மலையாள டிவி நிகழ்வில் கூறினார். இரண்டாவதாக, இந்த பெண் திருமணமாகி, குடும்பத்துடன் வாழும், ஒரு சினிமா துறையில் உள்ளவருடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் குடும்பத்தை கெடுத்து வந்தார். இவர் குணம் தெரிந்து, அந்த இரண்டாவது கணவரும் சில நாட்களில் ஓடிவிட்டார். இந்த இரண்டு கணவர்களையும் எப்படியெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் அவதூறாக பேசினார் என்று இவரைப்பற்றி YOUTUBE,ல் தேடினால் காணலாம். இப்போது இந்த நடிப்பு, நாடகம் எல்லாம், குழந்தைகளை காட்டி, இறந்துபோன கணவரின் மீதி சொத்தையும் அடைவதற்க்கே அல்லாமல், அவரிடம் அன்பு பாசத்தினால் அல்ல. இது கேரளாவில் உள்ள பலருக்கும் அறிந்ததே. தமிழ் மக்களுக்கு இந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பற்றி முழுவதும் தெரிந்திருக்காது
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
26 மார், 2021 - 20:04 Report Abuse
சாண்டில்யன் சட்டப்படி பிரிந்தாலும் உறவுகள் தொடர்கதை திருமண பந்தம் என்றுதான் இல்லை உண்மையான இருமனம் இயைந்த உறவுகள் மனங்கள் எக்காலமும் பிரிவதில்லை
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
26 மார், 2021 - 10:38 Report Abuse
MARUTHU PANDIAR ஆஹா ரொம்ப ரொம்ப தெரிஞ்சுக்க வேண்டிய மிக மிக முக்கியமான தல போற நியூஸ் தான்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
26 மார், 2021 - 06:33 Report Abuse
Manian இது ஆனந்த காநிராக இருக்குமோ? ஏனென்றால் இறந்தது பழைய கணவன்
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
27 மார், 2021 - 07:14Report Abuse
VIDHURANவக்கிரமான கருத்து...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in