செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷிதா அசோக் இணைந்துள்ளதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து ரித்திகா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், பாக்கியலெட்சுமி தொடரின் ஹீரோவான கோபி அதாவது நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ரித்திகாவுடன் கற்பூரத்தை தொட்டு கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியது உண்மை தான் என்றும், அவருக்கு பேர்வெல் கொடுத்து தான் இந்த பதிவை சதீஷ் வெளியிட்டுள்ளார் என்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பலரும் பேசி வருகின்றனர்.