‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் பாக்கியலெட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த தொடர் சமீபகாலமாக அயர்ச்சியான திரைக்கதையுடன் ஸ்லோவாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் கதாநாயகனான சதீஷ், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாக்கியலெட்சுமி தொடர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கடந்த 5 வருடங்களாக பாக்கியலெட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் விரைவில் வரவிருக்கிறது. இத்தனை நாட்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பாக்கியலெட்சுமி தொடரில் சிலவற்றை பிடிக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீரியலின் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இருக்கும்' என்று கூறி இருக்கிறார்.
இதன்மூலம் பாக்கியலெட்சுமி சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வர உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.