மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் பாக்கியலெட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த தொடர் சமீபகாலமாக அயர்ச்சியான திரைக்கதையுடன் ஸ்லோவாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் கதாநாயகனான சதீஷ், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாக்கியலெட்சுமி தொடர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கடந்த 5 வருடங்களாக பாக்கியலெட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் விரைவில் வரவிருக்கிறது. இத்தனை நாட்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பாக்கியலெட்சுமி தொடரில் சிலவற்றை பிடிக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீரியலின் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இருக்கும்' என்று கூறி இருக்கிறார்.
இதன்மூலம் பாக்கியலெட்சுமி சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வர உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.