பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் பாக்கியலெட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த தொடர் சமீபகாலமாக அயர்ச்சியான திரைக்கதையுடன் ஸ்லோவாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் கதாநாயகனான சதீஷ், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாக்கியலெட்சுமி தொடர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கடந்த 5 வருடங்களாக பாக்கியலெட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் விரைவில் வரவிருக்கிறது. இத்தனை நாட்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பாக்கியலெட்சுமி தொடரில் சிலவற்றை பிடிக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீரியலின் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இருக்கும்' என்று கூறி இருக்கிறார்.
இதன்மூலம் பாக்கியலெட்சுமி சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வர உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.




