பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர் |

சுந்தரி தொடரின் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார் நடிகை கேப்ரில்லா செல்லஸ். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தடைகளை தாண்டி இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தன் காதலர் ஆகாஷை கணவராக கைபிடித்த அவருக்கு தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சுந்தரி தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேப்ரில்லாவே தெரிவித்திருந்தார். தற்போது அவர் குழந்தைப்பேறுக்காக தனது சொந்த ஊருக்கு செல்கிறார். இதனையடுத்து ஊருக்கு கிளம்பும் முன் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேப்ரில்லா மீடியா பயணத்திற்கு ப்ரேக் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.




