ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் பாக்கியலெட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த தொடர் சமீபகாலமாக அயர்ச்சியான திரைக்கதையுடன் ஸ்லோவாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் கதாநாயகனான சதீஷ், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாக்கியலெட்சுமி தொடர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கடந்த 5 வருடங்களாக பாக்கியலெட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் விரைவில் வரவிருக்கிறது. இத்தனை நாட்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பாக்கியலெட்சுமி தொடரில் சிலவற்றை பிடிக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீரியலின் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இருக்கும்' என்று கூறி இருக்கிறார்.
இதன்மூலம் பாக்கியலெட்சுமி சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வர உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.