மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
பருத்தி வீரன் பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தபடி பெரிய இடம் கிடைக்கவில்லை என்றபோதும் தெலுங்கு, மலையாளத்தில் அவர் அதிகமான படங்களில் நடித்தார். சமீபத்தில் மும்பை தொழிலதிபரான தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜூவை பெங்களூரில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.
திருமணம் முடிந்து இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கைமால் என்பவர் இயக்கும் ஆஷிக் வண்ண திவாசம் -என்ற படத்தின் படப்பிடிப்பில்தான் விரைவில் கலந்து கொள்ளப்போகிறார் பிரியாமணி. ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் பிரியாமணியும் நடித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் கலந்து கொள்கிறாராம் பிரியாமணி.