‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கி அதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் பாலிவுட்டிலும் ஆயிரம் கோடி வசூல் செய்த வெற்றி படமாக ஜவானை மாற்றினார் அட்லீ. மேலும் இந்த படத்தின் மூலம் அனிருத், விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோரையும் தன்னுடன் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் அட்லீ.
இதில் படத்தின் கதாநாயகி நயன்தாராவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரியாமணியை எப்போதுமே அட்லீ, புலி அல்லது புலி மணி என்று தான் அழைப்பாராம். படத்தின் கதையை அட்லீ சொன்ன அந்த முதல்நாளில் இருந்து ஜாலியாக பழக ஆரம்பித்ததுடன் படப்பிடிப்பு நாட்களில் எப்போதுமே இந்த பெயரை தான் கூறி தான் பிரியாமணியை அழைப்பாராம் அட்லீ. மீண்டும் அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்வி சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் பிரியாமணி.