அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கி அதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் பாலிவுட்டிலும் ஆயிரம் கோடி வசூல் செய்த வெற்றி படமாக ஜவானை மாற்றினார் அட்லீ. மேலும் இந்த படத்தின் மூலம் அனிருத், விஜய்சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு ஆகியோரையும் தன்னுடன் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் அட்லீ.
இதில் படத்தின் கதாநாயகி நயன்தாராவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரியாமணியை எப்போதுமே அட்லீ, புலி அல்லது புலி மணி என்று தான் அழைப்பாராம். படத்தின் கதையை அட்லீ சொன்ன அந்த முதல்நாளில் இருந்து ஜாலியாக பழக ஆரம்பித்ததுடன் படப்பிடிப்பு நாட்களில் எப்போதுமே இந்த பெயரை தான் கூறி தான் பிரியாமணியை அழைப்பாராம் அட்லீ. மீண்டும் அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்வி சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் பிரியாமணி.