‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கும் முன்னே செப் வெங்கடேஷ் பட் அதிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் விலக முற்றிலும் புதிய குழுவுடன் சீசன் 5 ஆரம்பமானது. இந்நிலையில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன், குக் வித் கோமாளி சீசன் 5லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ளமாட்டேன்' என கூறியுள்ளார்.
இதுபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனத்துடன் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக டாப்பு குக்கு டூப்பு குக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பால் குக் வித் கோமாளி சீசன் 5 முந்தைய சீசன்களை போல வெற்றி பெறுமா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.