பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 21வது சர்வதேச திரைப்பட விழா, நேற்று இரவு கோலாகலமாக துவங்கியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவில், மாநில அரசு நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா, திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது. இதில், உலக அளவில் விருதுகள் பெற்ற பல திரைப்படங்கள் திரையிடப்படும். கோவாவிற்கு அடுத்து, திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வர். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதல்வர் பினராயி விஜயன் பாரம்பரிய விளக்கை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
இந்தி நடிகர் அமோல் பலேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செக் குடியரசின் திரைப்பட இயக்குனர் ஜெர்ரி மன்சிலுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சசி தரூர் எம்.பி., அமைச்சர்கள் தாமஸ் ஐசக், ஏ.கே.பாலன், இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை ஷீலா, நடிகர் மது கலந்து கொண்டனர்.
டிச., 16 வரை 62 நாடுகளை சேர்ந்த, 184 திரைப்படங்கள் 14 இடங்களில் 490 காட்சிகளாக திரையிடப்படுகிறது. வெளிநாடுகளை சேர்ந்த திரை உலக பிரபலங்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான படங்களை தேர்வு செய்வர். சிறந்த படத்திற்கு தங்க காகம் விருது வழங்கப்படும்.இது பிளாஸ்டிக் இல்லா திரைப்பட விழா என அறிவிக்கப்பட்டது. முற்றிலும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தாமல் அனைத்து நிகழ்ச்சிகளையும், கேரள அரசு நடத்தவுள்ளது.