'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாளத்தில் பிரபல இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பும் இவரும் ஒரே காலத்தில் சினிமாவில் நுழைந்ததுடன் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களும் கூட. இயக்குனர் நாதிர்ஷா, 'கட்டப்பனையில் ஹிருத்திக் ரோஷன், அமர் அக்பர் ஆண்டனி' உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் திலீப்பை வைத்து 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது செல்லப்பிராணியான நோபில் என்கிற பூனையை குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் நாதிர்ஷா.
அப்போது அங்கிருந்த பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பூனைக்கு அதன் சீற்றத்தை தணிக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு கயிறு கட்டியதுடன் சிறிதளவு மயக்க மருந்தையும் கொடுத்திருக்கின்றனர். அந்த சமயத்தில் பூனை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியான நாதிர்ஷா இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் நாதிர்ஷா.
இந்த புகாரில் தனது செல்லப் பூனைக்கு கழுத்தில் கட்டப்பட்ட கயிறு காரணமாக மரணம் சம்பவித்ததா அல்லது அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அது உயிரிழந்ததா? இது குறித்து பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார் நாதிர்ஷா.