நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி |

ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் பாபு விஜய் தற்போது முதல்முறையாக இயக்கியுள்ள படம் 'சட்டென்று மாறுது வானிலை'. இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்திற்காக பாபு விஜய் அளித்த பேட்டியில், சர்கார் பட காலகட்டத்தில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, "சர்கார் படம் உருவாகி வந்தபோது விஜய் சாருடன் நெருங்கி பழக சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் என்னை கதை சொல்ல வரச் சொன்னார். இரண்டரை மணி நேரம் கதை கேட்ட பிறகு 'இந்தக் கதையை நான் பண்ண முடியாது. என்னோட சம்பளம், வியாபாரம் எல்லாம் மாறிவிட்டது. அப்புறம் ஏன் வரச்சொல்லிக் கதை கேட்டீங்கன்னு நீ கேட்கலாம்? உன் கதைகளம் எப்படி இருக்குன்னு பார்க்க விரும்பினேன். நல்லா இருக்கு கதை. ஒரு படம் உருவாக்கிய பிறகு வா பார்க்கலாம் என்று கூறினார். அந்த மனசு தான் விஜய் சார்." என தெரிவித்துள்ளார்.