2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி மோகன்லாலை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வழியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் சில காட்சிகளையும் நீக்கும்படியும் மாற்றும்படியும் சென்சார் அதிகாரிகள் வலியுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் தேசியக் கொடியின் நிறங்கள் குறித்து பேசப்படும் ஒரு வசனத்தை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது வசனத்தை மியூட் செய்யவோ சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்ல படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தலையை பலமுறை சுவற்றில் மோதி தாக்குவது போன்ற காட்சியின் நீளத்தை குறைக்கும்படியும் கூறியுள்ளது.