திகில் படத்தில் நடிக்க வேண்டும்: 'மதராஸி' அக்ஷய் கிருஷ்ணா ஆசை | அஜித் அளித்த வாழ்க்கை பாடம் சிபி சந்திரன் சிலிர்ப்பு | 3 நாட்களில் 200 கோடி வசூலித்த 'ஓஜி' | விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு | நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி மோகன்லாலை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வழியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் சில காட்சிகளையும் நீக்கும்படியும் மாற்றும்படியும் சென்சார் அதிகாரிகள் வலியுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் தேசியக் கொடியின் நிறங்கள் குறித்து பேசப்படும் ஒரு வசனத்தை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது வசனத்தை மியூட் செய்யவோ சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்ல படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தலையை பலமுறை சுவற்றில் மோதி தாக்குவது போன்ற காட்சியின் நீளத்தை குறைக்கும்படியும் கூறியுள்ளது.