தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை வியாபார எல்லை மற்றும் வசூல் ரீதியாக கர்நாடக திரையுலகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரொம்பவே பின்தங்கி இருந்தது. சமீபவருடங்களாக கேஜிஎப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களின் அதிரடி வருகை காரணமாக கன்னட சினிமாவும் தற்போது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் அதிகப்படியான தியேட்டர் கட்டணங்கள் படங்களின் வசூலை, படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன என்கிற குற்றச்சாட்டு ரொம்ப நாளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசு பட்ஜெட்டில் இனி எந்த தியேட்டரிலும் டிக்கெட் விலை நிர்ணயம் 200 ரூபாய்க்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும் அதிகப்படியாக வசூலிக்கப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஓடிடி தளங்களும் கன்னட படங்களை வாங்குவதற்கு இப்போதும் பெரிய அளவில் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் அந்த படங்களுக்கு வர வேண்டிய வருமானம் பாதிக்கப்படுகிறது. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் செட்டி தனது சொந்த தயாரிப்புகளை ஓடிடியில் விற்பதற்கு சிரமப்பட்டதால் தனியாகவே ஓடிடி களம் ஒன்றை ஆரம்பித்து விட்டார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கன்னட திரைப்படங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதற்கும் தயாரிப்பாளர்களின் நலனை கருதியும் கர்நாடக அரசே புதிய ஓடிடி தளத்தையும் துவங்க உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கன்னட திரையுலகினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.