'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் முடித்தார். இந்த நிலையில் இவர்கள் நேற்று (பிப்.,8) பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுடன் நாகார்ஜுனாவின் மனைவி அமலாவும் சென்றிருந்தார். நாகார்ஜுனாவின் தந்தை நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரைப் பற்றி, டாக்டர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய ‛அக்கினேனி கா விராட் வியாக்தித்வா' என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த சந்திப்பின்போது நடிகை சோபிதா, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்போல், ஆந்திராவின் நடன பொம்மைகளான கொண்டபள்ளி நடன பொம்மைகளை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். இப்புகைப்படத்தை பகிர்ந்த சோபிதா, ‛‛என்னை அறிந்த எவருக்கும் கொண்டபள்ளி பொம்மைகளை (நடனமாடும் பொம்மைகள்) நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது தெரியும். அவற்றின் நினைவுகள் தெனாலியில் உள்ள எனது தாத்தா, பாட்டி வீட்டில் எனது குழந்தை பருவத்தில் தொடங்கின. அப்படிப்பட்ட ஒன்றை பிரதமருக்கு பரிசளிக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த கைவினைப்பொருளின் பூர்வீகம் ஆந்திரா என்பது பிரதமருக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.