ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கேரளா அரசால் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்பிறகு பல நடிகைகள், மலையாள நடிகர்கள் மீது துணிச்சலுடன் பாலியல் புகார் அளித்தனர். அதில் முக்கிமானவர் கவர்ச்சி நடிகை மினு முனீர். இவர் முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு மற்றும் முகேஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் கொடுத்த அத்தனை பாலியல் புகார்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார் மினு முனீர். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் நான் அளித்த பாலியல் புகார்களை வாபஸ் பெறுகிறேன். என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த புகார் வாபஸை போலீசார் ஏற்கவில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு முறைப்படி எழுத்துபூர்வமாகத்தான் புகாரை வாபஸ் பெற முடியும். வாபஸ் வாங்குவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை மினு முனீர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னுடைய உறவினரின் 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது... தான் புகார் அளித்த நடிகர்களின் திட்டமிட்ட சதி என்று கருதும் மினு முனீர், இனி அவர்களை எதிர்த்து போராட முடியாது என்பதாலேயே வாபஸ் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.