ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரை உலகில் பல வருடங்களாக நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியது. இதைத் தொடர்ந்து பலரும் தைரியமாக முன்வைத்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் களை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதில் பிரபல நடிகர்களான முகேஷ், சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதியப்பட்டன. இதில் நடிகரும் எம்எல்ஏவும் ஆன முகேஷ் மீது பெண் நடிகை ஒருவர் தொடர்ந்து வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது புகார் அளித்த அந்த நடிகை தான் இனிமேல் இந்த வழக்கில் தொடர்ந்து ஆர்வம் காட்டப் போவதில்லை என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “இப்படி தைரியமாக முன்வந்து புகார் அளித்த எனக்கு அரசு தரப்பில் இருந்து எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை. அவர்கள் ரொம்பவே கவனக்குறைவாக இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து இந்த வழக்கில் என்னால் ஆர்வம் காட்ட முடியாத அளவிற்கு சோர்வுற்று விட்டேன். அதற்காக யாருடனும் சமரசமாக சென்றுவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. நான் ஒரு அப்பாவி. எனக்கு நீதி வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ வழக்கு பதிய வேண்டும். ஒருவேளை எனக்கு ஏற்படும் பிரச்சனைகளால் நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று விரத்தியுடன் கூறியுள்ளார்.




