'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! |

மலையாள திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர். இதில் சில குணச்சித்திர நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நிகழ்வுகளும் நடைபெற்றன.
இப்படி அடுத்தடுத்து பல நடிகைகள் புகார் கூறியதை தொடர்ந்து இதை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது கேரள அரசு. இந்த குழுவின் விசாரணையில் நடிகை ஒருவர் ஏற்கனவே பிரபல நடிகரும் தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவருமான முகேஷ் மீது கொடுத்திருந்த புகாரை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சிறப்பு விசாரணை குழு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனுடன் இமெயில் மற்றும் வாட்சப் ஆதாரங்கள் போன்றவற்றையும் சில சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே இதே நடிகையின் குற்றச்சாட்டின் பெயரில் தான் முகேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த நிலையில் மீண்டும் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.