ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
மலையாள திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர். இதில் சில குணச்சித்திர நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நிகழ்வுகளும் நடைபெற்றன.
இப்படி அடுத்தடுத்து பல நடிகைகள் புகார் கூறியதை தொடர்ந்து இதை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது கேரள அரசு. இந்த குழுவின் விசாரணையில் நடிகை ஒருவர் ஏற்கனவே பிரபல நடிகரும் தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவருமான முகேஷ் மீது கொடுத்திருந்த புகாரை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சிறப்பு விசாரணை குழு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனுடன் இமெயில் மற்றும் வாட்சப் ஆதாரங்கள் போன்றவற்றையும் சில சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே இதே நடிகையின் குற்றச்சாட்டின் பெயரில் தான் முகேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த நிலையில் மீண்டும் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.