அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் |

கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானாலும் தனது எளிமையான குணங்களால் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கவர்ந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021 அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதிலேயே அவர் இந்த உலகை விட்டு பிரிந்தது அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீனே நீனே ராஜகுமாரா என்கிற அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பவன் பட் என்பவர் எழுத சுனில் கோஷி என்பவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.




