துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் தற்போது 303 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. இதே நிறுவனம் தயாரித்து, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான பான் இந்தியா படமான 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியைத் தழுவியது. மற்றொரு படமான பாலகிருஷ்ணா நடித்த 'டாகு மகாராஜ்' படம் குறைந்த லாபத்தையே தந்தது.
'சங்கராந்திகி வஸ்துனம்' படம் பெரும் லாபத்தைக் கொடுத்ததாக சமீபத்தில் நடந்த நன்றி விழாவில் அதன் வினியோகஸ்தர்களே மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகாமல், தெலுங்கில் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.