தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா |
அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் தற்போது 303 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. இதே நிறுவனம் தயாரித்து, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான பான் இந்தியா படமான 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியைத் தழுவியது. மற்றொரு படமான பாலகிருஷ்ணா நடித்த 'டாகு மகாராஜ்' படம் குறைந்த லாபத்தையே தந்தது.
'சங்கராந்திகி வஸ்துனம்' படம் பெரும் லாபத்தைக் கொடுத்ததாக சமீபத்தில் நடந்த நன்றி விழாவில் அதன் வினியோகஸ்தர்களே மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்கள். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகாமல், தெலுங்கில் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.