பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் | பிளாஷ்பேக் : ஹிந்திப் படத்தை ரீமேக் செய்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்' | நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை | அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! |

பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கபாலி' படத்தை தெலுங்கில் வெளியிட்ட வினியோகஸ்தர் சுங்கர கே.பி.சவுத்ரி. 44 வயதான அவர் கோவா-வில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஆறேழு மாதங்களாக அந்த வாடகை அபார்ட்மென்ட்டில் அவர் வசித்து வருகிறாராம். தற்கொலை குறிப்பு ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளதாகவும் அது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது.
தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் போனகால் இடத்தைச் சேர்ந்தவர் கே.பி.சவுத்ரி. பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தவர். புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியில் டைரக்டர் ஆப் ஆபரேஷ்ன்ஸ் பதவி வகித்தவர். சில தெலுங்குப் படங்களையும் தயாரித்துள்ளார். 2023ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். திரைப்படத் தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் போதைக் கடத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சிறையிலிருந்து வந்த பின்பு கோவா சென்று அங்கு கிளப் ஒன்றை ஆரம்பித்தார் என்றும், அதிலும் நஷ்டம் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். அவரது தற்கொலை தெலுங்குத் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.




