நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள நடிகையான நிகிலா விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கிடாரி மற்றும் கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் நிகிலா விமலுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. இன்னொரு பக்கம் மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில், நுனக்குழி' மற்றும் சமீபத்தில் வெளியான கத இன்னுவர உள்ளிட்ட படங்களிலும் நிகிலா விமலின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் கடந்த 2022ல் உன்னி முகுந்தன் தயாரித்து கதாநாயகனாக நடித்த மேப்படியான் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு வந்த போது மறுத்துவிட்டார் நிகிலா விமல். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மேப்படியான் படத்தின் இயக்குனர் விஷ்ணு மோகன் என்னை சந்தித்து அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து கூறியபோது அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. ஆனாலும் எனக்கு முழு கதையை கூறுங்கள் என்று கேட்டபோது அவரிடம் அப்போது முழுக்கதை தயாராக இல்லை. கேட்ட அளவிற்கு அந்த கதாபாத்திரம் என்னை ஈர்க்கவில்லை என்பதால் நான் அதில் நடிக்க மறுத்து விட்டேன். அப்போது இயக்குனர் விஷ்ணு மோகனின் முகத்தில் நான் மிகப்பெரிய ஏமாற்றத்தை பார்த்தேன். அதேசமயம் அடுத்ததாக அவர் 'கத இன்னுவர' என்கிற படத்தின் ஸ்கிரிப்ட்டுடன் மீண்டும் என்னிடம் வந்தார். அந்த படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார்.