கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' |
மலையாள நடிகையான நிகிலா விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கிடாரி மற்றும் கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் நிகிலா விமலுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. இன்னொரு பக்கம் மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில், நுனக்குழி' மற்றும் சமீபத்தில் வெளியான கத இன்னுவர உள்ளிட்ட படங்களிலும் நிகிலா விமலின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் கடந்த 2022ல் உன்னி முகுந்தன் தயாரித்து கதாநாயகனாக நடித்த மேப்படியான் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு வந்த போது மறுத்துவிட்டார் நிகிலா விமல். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மேப்படியான் படத்தின் இயக்குனர் விஷ்ணு மோகன் என்னை சந்தித்து அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து கூறியபோது அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. ஆனாலும் எனக்கு முழு கதையை கூறுங்கள் என்று கேட்டபோது அவரிடம் அப்போது முழுக்கதை தயாராக இல்லை. கேட்ட அளவிற்கு அந்த கதாபாத்திரம் என்னை ஈர்க்கவில்லை என்பதால் நான் அதில் நடிக்க மறுத்து விட்டேன். அப்போது இயக்குனர் விஷ்ணு மோகனின் முகத்தில் நான் மிகப்பெரிய ஏமாற்றத்தை பார்த்தேன். அதேசமயம் அடுத்ததாக அவர் 'கத இன்னுவர' என்கிற படத்தின் ஸ்கிரிப்ட்டுடன் மீண்டும் என்னிடம் வந்தார். அந்த படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார்.