ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் நிவின்பாலி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை தொடர்ந்து நடிகைகள் பலர் பிரபலங்கள் மூலம் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளித்து வருகின்றனர்.
அப்படி நடிகை ஒருவர், நடிகர் நிவின்பாலி தன்னை துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் அவர் மீது புகார் அளித்தார். அதே சமயம் நடிகர் நவீன்பாலி இந்த குற்றச்சாட்டு குறித்து மறுத்ததுடன் இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சதி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த குழுவினர் முன்பு நேரில் ஆஜரான நிவின்பாலி இது குறித்து கூறும்போது, தன் மீது கூறப்பட்டுள்ள புகார் ஜோடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் நடிகையின் புகாரில் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட நாளில் தான் துபாயில் இல்லை என்றும் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட படங்களை சேர்ந்த இயக்குனர்கள் கூட ஆதாரத்துடன் சமீபத்தில் தகவல்கள் வெளியிட்டனர் என்றும் விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.