'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அது கொடுத்த தைரியமும் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசவும் காவல்துறையில் புகார் அளிக்கவும் வைத்தது. அந்த வகையில் பிரபல மலையாள வில்லன் மற்றும் குணசத்திர நடிகரான சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால். தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சில நாட்களாக தலைமறைவானார் நடிகர் சித்திக். அதை தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இவரை கைது செய்வதற்கு தடை விதித்து இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. தனக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து தலைமறைவில் இருந்து வெளியே வந்து தற்போது பொதுவெளியில் தலை காட்டத் துவங்கியுள்ளார் நடிகர் சித்திக். அந்த வகையில் தனது பிறந்த நாளையும் தனது பேரனின் நூல்கட்டு விழாவையும் ஒரு சேர கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சித்திக். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகன் ஷாகின் சித்திக்.