‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அது கொடுத்த தைரியமும் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசவும் காவல்துறையில் புகார் அளிக்கவும் வைத்தது. அந்த வகையில் பிரபல மலையாள வில்லன் மற்றும் குணசத்திர நடிகரான சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால். தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சில நாட்களாக தலைமறைவானார் நடிகர் சித்திக். அதை தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இவரை கைது செய்வதற்கு தடை விதித்து இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. தனக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து தலைமறைவில் இருந்து வெளியே வந்து தற்போது பொதுவெளியில் தலை காட்டத் துவங்கியுள்ளார் நடிகர் சித்திக். அந்த வகையில் தனது பிறந்த நாளையும் தனது பேரனின் நூல்கட்டு விழாவையும் ஒரு சேர கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சித்திக். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகன் ஷாகின் சித்திக்.