நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அது கொடுத்த தைரியமும் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசவும் காவல்துறையில் புகார் அளிக்கவும் வைத்தது. அந்த வகையில் பிரபல மலையாள வில்லன் மற்றும் குணசத்திர நடிகரான சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால். தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சில நாட்களாக தலைமறைவானார் நடிகர் சித்திக். அதை தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இவரை கைது செய்வதற்கு தடை விதித்து இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. தனக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து தலைமறைவில் இருந்து வெளியே வந்து தற்போது பொதுவெளியில் தலை காட்டத் துவங்கியுள்ளார் நடிகர் சித்திக். அந்த வகையில் தனது பிறந்த நாளையும் தனது பேரனின் நூல்கட்டு விழாவையும் ஒரு சேர கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சித்திக். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகன் ஷாகின் சித்திக்.