லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இயக்குனராக மாறி விருதுக்கான படங்களாக இயக்கி வருகிறார். அதிலிருந்து சற்று மாறி, கமர்சியல் அம்சங்களுடன் தற்போது கன்னடத்தில் பிரபல முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் டாக்ஸிக் என்கிற படத்தை இயக்கி வருகிறார் கீது மோகன்தாஸ்.
இந்த நிலையில் இவருக்கும் யஷ்ஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது படத்தின் பல காட்சிகளை நடிகர் யஷ் தான் இயக்கி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சுதேவ் நாயர் என்பவர் இது பொய்யான தகவல் என இது குறித்து கூறியுள்ளார்.
“இது சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நான் பணியாற்றிய படங்களிலேயே அழகாக, டென்ஷன் இல்லாமல் இயங்கி வரும் படக்குழு என்றால் அது இதுதான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனரும் மற்றும் ஹீரோ யஷ் இருவருமே எந்த ஈகோவும் இன்றி ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்வதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இவர்கள் இருவரது நோக்கமும் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.