சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

சமீபத்தில் மலையாளத்தில் லோகா சாப்டர் 1 சந்திரா என்கிற படம் வெளியானது. கிட்டத்தட்ட சூப்பர் உமன் கதை அம்சத்துடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது 90 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வில்லனாக நடன இயக்குனர் சாண்டி மலையாளத்தில் முதல்முறையாக அறிமுகமாகி உள்ளார்.
படத்தில் சாண்டி தன் தாயிடம் பேசும் போது பெங்களூருவில் இருந்து வரும் பெண்களை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிற விதமாக அவர்களை பற்றி ஒரு வசனம் பேசுவார். இந்த நிலையில் படம் பார்த்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பலரும் இப்படி தங்கள் ஊர் பெண்களை தவறாக சித்தரித்து காட்சி இடம் பெற்றதற்காக தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பளாரான துல்கர் சல்மான்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் கர்நாடகாவில் உள்ள மக்களின் சென்டிமென்ட்டை புண்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படி ஒரு வசனம் இடம் பெறவில்லை. அந்த வார்த்தைகளை நீக்க நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.