சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆப்ரிக்க நாடான கென்யாவில் நடைபெற உள்ளது. அதற்காக 120 பேர் கொண்ட குழுவினர் கென்யாவுக்குச் செல்ல உள்ளனர்.
கென்யா நாட்டின் பிரதம கேபினட் செயலாளர் மற்றும் வெளியுறவு மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான கேபினட் செயலாளர் முசாலியா முடவாடி-யை நேற்று ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார். கென்யாவில் படப்பிடிப்பை நடத்துவதற்கான அரசு அனுமதியையும் ராஜமவுலி பெற்றார்.
பின் பேசிய முசாலியா முடவாடி, “கென்யாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு சினிமாவைத் தாண்டியது; இது நாட்டின் இயற்கை அழகு, கலாசார செழுமை மற்றும் ஒப்பற்ற விருந்தோம்பலை உலகளாவிய பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும். இத்தகைய உயர்மட்ட திட்டத்தில் கென்யாவின் பங்கேற்பு, நாட்டை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், சர்வதேச திரைப்பட தயாரிப்பு மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான வளர்ந்து வரும் மையமாகவும் நிலைநிறுத்துவதற்கு ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.
சர்வதேச திரைப்பட திட்டங்களை ஆதரிப்பதற்கும், உலகளாவிய படைப்புத் தொழில்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். இத்தகைய முயற்சிகள் உள்ளூர் திறமைகளுக்கு வாய்ப்புகளைத் திறக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க காட்சிகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் கென்யாவில் படமாக்கப்படுகிறது.புகழ்பெற்ற மசை மாரா புல்வெளிகளிலிருந்து நைவாஷா ஏரியின் அமைதியான கரைகள், சம்பூரின் கரடுமுரடான அழகு, மற்றும் அம்போசெலியிலிருந்து கிளிமஞ்சாரோ மலையின் கம்பீரமான காட்சிகள் வரை, கென்யாவின் பல்வேறு மற்றும் புகைப்படத்திற்கு ஏற்ற நிலப்பரப்புகள் உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தின் பட்ஜெட் 1100 கோடி என்றும், 120 உலக நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது என்றும் கென்யா பத்திரிகைகள் நேற்றைய சந்திப்பைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன.