சமூக சீர்திருத்த கதையில் நடிக்க தயாராகும் காமெடி நடிகர் | ஒருவழியாக வெளியானது ‛விடாமுயற்சி' பர்ஸ்ட்லுக்: அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் | திருமணம் செய்து கொள்ளாதீர்கள்: நவாசுதீன் சர்ச்சை கருத்து | 3 நாளில் 415 கோடி வசூலித்த ‛கல்கி 2898 ஏடி' | 2025ம் ஆண்டில் துவங்கும் கைதி-2 | மிஸ்டர். எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு! | டைனோசர்ஸ் பட இயக்குனர் உடன் இணையும் சிம்பு! | இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல் | இரண்டாவது நாளில் 298.5 கோடி வசூலித்த கல்கி 2898 ஏடி | சுந்தர். சியின் ‛ஒன் டூ ஒன்' படத்தின் டிரைலர் வெளியானது! |
தமிழில் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் குருவாயூர் அம்பலநடையில் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதில் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
அப்போது ஒரு பேட்டியில் அவரிடம், சமீப காலமாக மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம், பிரம்மயுகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இல்லையே.. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிகிலா விமல், “எல்லா படங்களிலும் கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. படத்தின் கதை எந்த கதாபாத்திரங்களை கேட்கிறதோ அவை மட்டுமே இருந்தால் போதும்.. ஆவேசம், மஞ்சும்மேல் பாய்ஸ் படங்களில் அதைத்தான் செய்திருந்தார்கள். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேவையில்லாமல் வலிய திணித்தாள் அது படத்தின் வெற்றியை பாதித்துவிடும். குறிப்பாக கமர்சியல் காரணங்களுக்காக படத்திற்கு கதாநாயகி வேண்டும் என திணிக்கவே கூடாது” என்று தனது கருத்தை ஆணித்தரமாக கூறியுள்ளார் நிகிலா விமல்.