'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
தமிழில் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் குருவாயூர் அம்பலநடையில் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதில் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
அப்போது ஒரு பேட்டியில் அவரிடம், சமீப காலமாக மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம், பிரம்மயுகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இல்லையே.. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிகிலா விமல், “எல்லா படங்களிலும் கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. படத்தின் கதை எந்த கதாபாத்திரங்களை கேட்கிறதோ அவை மட்டுமே இருந்தால் போதும்.. ஆவேசம், மஞ்சும்மேல் பாய்ஸ் படங்களில் அதைத்தான் செய்திருந்தார்கள். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேவையில்லாமல் வலிய திணித்தாள் அது படத்தின் வெற்றியை பாதித்துவிடும். குறிப்பாக கமர்சியல் காரணங்களுக்காக படத்திற்கு கதாநாயகி வேண்டும் என திணிக்கவே கூடாது” என்று தனது கருத்தை ஆணித்தரமாக கூறியுள்ளார் நிகிலா விமல்.