புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ். அதன் பிறகு வருஷம், சத்ரபதி, டார்லிங், பில்லா என பல படங்களில் நடித்து வந்தவருக்கு ராஜமவுலியின் பாகுபலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி- 2 படத்திற்கு பிறகு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ், சலார் போன்ற படங்களில் நடித்த பிரபாஸ், தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு கூட்டி உள்ளது. அதாவது ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழையப் போகிறார் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் ஸ்பெஷல் நபர் என்று குறிப்பிட்டது ஒருவேளை பிரபாஸுக்கு பெண் கிடைத்து விட்டதா? என்று ஒரு தரப்பினரும், ஒருவேளை அடுத்த படத்தை ஸ்பெஷல் நபர்கள் யாரேனும் இயக்கப் போகிறார்களோ? அது குறித்த தகவலை தான் இப்படி கூறியிருக்கிறாரோ என்றும் பிரபாஸ் ரசிகர்கள் பலவிதமான யூகங்களை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.