பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ். அதன் பிறகு வருஷம், சத்ரபதி, டார்லிங், பில்லா என பல படங்களில் நடித்து வந்தவருக்கு ராஜமவுலியின் பாகுபலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி- 2 படத்திற்கு பிறகு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ், சலார் போன்ற படங்களில் நடித்த பிரபாஸ், தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு கூட்டி உள்ளது. அதாவது ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழையப் போகிறார் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் ஸ்பெஷல் நபர் என்று குறிப்பிட்டது ஒருவேளை பிரபாஸுக்கு பெண் கிடைத்து விட்டதா? என்று ஒரு தரப்பினரும், ஒருவேளை அடுத்த படத்தை ஸ்பெஷல் நபர்கள் யாரேனும் இயக்கப் போகிறார்களோ? அது குறித்த தகவலை தான் இப்படி கூறியிருக்கிறாரோ என்றும் பிரபாஸ் ரசிகர்கள் பலவிதமான யூகங்களை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.




