10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து தரைமட்டமான நிலையில் வீடு இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகளை பெற்று வருகின்றனர். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற தொகையை பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்காக தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா', மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் விதமாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான நடிகர் சித்திக் அறிவித்துள்ளார். வரும் ஆக., 20ம் தேதி கேரளாவில் உள்ள அங்கமாலி நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
இது பற்றி அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியை நாங்கள் வேறு ஒரு சமயத்தில் நடத்தலாம் என்று தீர்மானித்திருந்தோம். அதுமட்டுமல்ல இப்படி ஒரு பாதிப்பு நடக்கும் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல என்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மழவில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை அப்படியே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக வழங்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.