டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவு, பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன் பல மக்கள் வீட்டிலிருந்து வாழ்வாதாரம் இழக்கவும் காரணமாகவும் அமைந்துவிட்டது. பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியிலும் நிவாரணப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். அந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் கவுரவமான லெப்டினென்ட் கர்னல் பொறுப்பு வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும் தனது அறக்கட்டளை மூலமாக சுமார் மூன்று கோடி அளவிலான நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த யு-டியூப் சேனல் நடத்தி வரும் அஜு அலெக்ஸ் என்பவர் மோகன்லால் இப்படி ராணுவ சீருடை அணிந்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டது குறித்து கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் நடிகர் சித்திக் போலீசில் அளித்த புகாரின் பேரில் அஜு அலெக்ஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.