ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

இந்தியாவில் இயற்கை பேரிடர் நிகழும் போதெல்லாம் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் மொழி பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்ட பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டம் ஆகின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களின் பங்களிப்பாக கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் லட்சங்களில் உதவிக்கரம் நீட்டிய நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். இதை அடுத்து நடிகர் பிரபாஸ் தற்போது இரண்டு கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸிற்கு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அதிக ரசிகர்கள் இருப்பதும் இந்திய அளவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறிவிட்டதும் தான் இந்த அளவிற்கு அவர் தாராளமாக நிவாரண நிதி வழங்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது.




