நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
இந்தியாவில் இயற்கை பேரிடர் நிகழும் போதெல்லாம் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் மொழி பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்ட பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டம் ஆகின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களின் பங்களிப்பாக கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் லட்சங்களில் உதவிக்கரம் நீட்டிய நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். இதை அடுத்து நடிகர் பிரபாஸ் தற்போது இரண்டு கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸிற்கு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அதிக ரசிகர்கள் இருப்பதும் இந்திய அளவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறிவிட்டதும் தான் இந்த அளவிற்கு அவர் தாராளமாக நிவாரண நிதி வழங்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது.