பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
திமுக தலைவர் கருணாநிதியை அனைவரும் அறிவார்கள். ஆனால் ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகர் ஏ. கருணாநிதி பற்றி இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரியாது. இரண்டு கருணாநிதிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே உயரம் குறைவானவர்கள். எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள். இருவருமே திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1948ம் ஆண்டில் வெளிவந்த “ஆதித்தன் கனவு” என்ற படத்தில் ஏ.கருணாநிதி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து திகம்பர சாமியார், பொன்முடி, தேவகி, கல்யாணி, வளையாபதி என மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் நடித்து புகழ்பெற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன், மாங்கல்யம், ஆதித்தன் கனவு, பாலும் பழமும், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி. உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக காமெடி நடிகை டி.பி முத்துலட்சுமியின் ஜோடியாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அந்த காலத்திலேயே ஏ.கருணாநிதி சென்னை தியாகராய நகரில், “மாமியா உணவகம்” என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் நடத்தி வந்தார். இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவரது உணவகம் பெயர் பெற்றிருந்தது. இதற்கு காரணம் ஏ.கருணாநிதி அடிப்படையில் ஒரு சமையல் கலைஞர்.
1923ல் திருவாரூரில் பிறந்த இவர் 58வது வயதில் காச நோயால் காலமானார்.