இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கும் குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் | கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” | எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம் |
மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான கதாசிரியராக வலம் வருபவர் ரெஞ்சி பணிக்கர். மம்முட்டி நடித்த கிங், சுரேஷ் கோபி நடித்த கமிஷனர் மற்றும் இவர்கள் இணைந்து நடித்த கிங் அண்ட் கமிஷனர் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல பரத் சந்திரன் ஐபிஎஸ் மற்றும் ரவுத்திரம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். கடந்த 10 வருடங்களாக ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறி பிஸியான நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் இவர் கதை எழுதும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் இயக்க உள்ள புதிய படம் ஒன்றுக்கு கதை எழுதி வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படம் ஒன்றை கதை எழுதி இயக்க உள்ளார் ரெஞ்சி பணிக்கர். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பஹத் பாஸில் பிறந்த நாளன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த 2008ல் மம்முட்டி நடித்த ரவுத்திரம் படத்தை இயக்கிய ரெஞ்சி பணிக்கர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் டைரக்சனுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.