காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான கதாசிரியராக வலம் வருபவர் ரெஞ்சி பணிக்கர். மம்முட்டி நடித்த கிங், சுரேஷ் கோபி நடித்த கமிஷனர் மற்றும் இவர்கள் இணைந்து நடித்த கிங் அண்ட் கமிஷனர் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல பரத் சந்திரன் ஐபிஎஸ் மற்றும் ரவுத்திரம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். கடந்த 10 வருடங்களாக ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறி பிஸியான நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் இவர் கதை எழுதும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் இயக்க உள்ள புதிய படம் ஒன்றுக்கு கதை எழுதி வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படம் ஒன்றை கதை எழுதி இயக்க உள்ளார் ரெஞ்சி பணிக்கர். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பஹத் பாஸில் பிறந்த நாளன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த 2008ல் மம்முட்டி நடித்த ரவுத்திரம் படத்தை இயக்கிய ரெஞ்சி பணிக்கர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் டைரக்சனுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.




