வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் சமுத்திரக்கனி. அவர் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ளார். சுமார் 40 படங்களில் போலீசாக நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள 'தடயம்' என்ற வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. இதிலும் அவர் போலீசாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் அதிகம் குழந்தைகள், அன்பு, நட்பு சார்ந்த விஷயங்களைத்தான் விரும்புவேன். அன்பை ஆதாரமாகக்கொண்டுதான் இந்த உலகம் இயங்குகிறது என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. நான் 40 போலீஸ் கேரக்டர்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
காக்கி யூனிபார்ம் போடுவது என்பது பெரிய பெருமை. எல்லோரும் அதற்கு கச்சிதமாகப் பொருந்திவிட மாட்டார்கள். அதற்கு ஓர் உயரம், ஒரு தோற்றம், தெளிவு வேண்டும். அந்த கேரக்டரில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். 'ரைட்டர்' படம், அந்த கேரக்டரில் என்னை வேறு மாதிரி கொண்டுபோய்ச் சேர்த்தது.
என்னை போலீஸ் கேரக்டருக்குள் கொண்டு வந்தது வெற்றி மாறன். 'விசாரணை' படம் எனக்குக் கொண்டுவந்து சேர்த்த மரியாதை மிகவும் பெரியது. அது ஓர் ஆழமான படைப்பு. அதுபோல் ஒரு படைப்பை எங்களால் மீண்டும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஓர் அற்புதம்போல அந்தப் படம் உருவாகிவிட்டது. அதை அப்படித்தான் பார்க்கிறேன். 'ரைட்டர்' படமும் அப்படிச் செய்ததுதான். அது போன்ற கதைகள்தான், இந்த திரைப் பயணத்தின் ருசி. இவ்வாறு கூறினார் சமுத்திரக்கனி.




