பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 350 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகைகளான மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி பிரியதர்ஷன் ஆகியோர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.